பெரம்பலூர் மாவட்டம் 30-09-1995 ஆம் ஆண்டு தமிழக அரசால் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. பெரம்பலூர் வடக்கே கடலூரையும் தெற்கே திருச்சிராப்பள்ளியையும் கிழக்கே தஞ்சாவூரையும் மேற்கே சேலத்தையும் தனது எல்லையாகக் கொண்டுள்ளது.
1741ஆம் ஆண்டு மராட்டியர்கள் திருச்சியைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். அப்போது சந்தா சாஹிப் இந்தப்ப பகுதியை ஆண்டுக் கொண்டிருந்தார். பிறகு 1748 ஆம் ஆண்டு சந்தா சாஹிபிடமிருந்து ஆற்காடு நவாப் இந்தப்பகுதியை தனது வசமாக்கிக் கொண்டார்.
ஆற்காடு நவாபிடமிருந்து முஹம்மதலி வசப்படுத்தி தன்னுடைய ஆட்சிப்பகுதிகளில் பல பாளையங்களாகப் பிரித்து ஆட்சிப்புரிந்து வந்தார். இதில உடையார்பாளையம், அரியலூர் ஆகியவையும் அடங்கும். உடையார்பாளையம் பகுதியிலிருந்த இளம்புலிகார்கள் ஒன்று சேர்ந்து உடையார் பாளையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஆற்காடு நவாபின் படைகள் மீண்டும் உடையார்பாளையத்தை தங்கள் வசப்படுத்திக்கொண்டனர். அப்போது போரில் தோல்விக் கண்ட புலிகார்கள் தரங்கம்பாடிக்கு அகதிகளாக சென்றனர். அங்கு அவர்கள் டச்சுக் காரர்களின் உதவியுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினர். இதன்மூலம் உடையார்பாளையத்தின் வழியாக ஆற்காட்டிற்கும் திருச்சிக்கும் இடையே தடையில்லாதப் போக்குவரத்து பெரம்பலூர் வழியாக ஆற்காடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆற்காடு நவாபிடமிருந்து முஹம்மதலி வசப்படுத்தி தன்னுடைய ஆட்சிப்பகுதிகளில் பல பாளையங்களாகப் பிரித்து ஆட்சிப்புரிந்து வந்தார். இதில உடையார்பாளையம், அரியலூர் ஆகியவையும் அடங்கும். உடையார்பாளையம் பகுதியிலிருந்த இளம்புலிகார்கள் ஒன்று சேர்ந்து உடையார் பாளையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஆற்காடு நவாபின் படைகள் மீண்டும் உடையார்பாளையத்தை தங்கள் வசப்படுத்திக்கொண்டனர். அப்போது போரில் தோல்விக் கண்ட புலிகார்கள் தரங்கம்பாடிக்கு அகதிகளாக சென்றனர். அங்கு அவர்கள் டச்சுக் காரர்களின் உதவியுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினர். இதன்மூலம் உடையார்பாளையத்தின் வழியாக ஆற்காட்டிற்கும் திருச்சிக்கும் இடையே தடையில்லாதப் போக்குவரத்து பெரம்பலூர் வழியாக ஆற்காடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வரலாறானது பல்வேறு பெரும் போர்களுடன் தொடர்ந்தது. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் காலத்திலும் பிரிட்டிஷ்காரர்களுடன் தொடர்ந்து இப்பகுதிக்காக போர் நடைபெற்றது. இறுதியாக திப்புசுல்தான் இறந்தபிறகு பெரம்பலூர் பகுதியை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் 1801ஆம் ஆண்டு கொண்டு வந்தனர்.

இந்திய விடுதலைக்குப்பிறகு 1995 ஆம்ஆண்டு திருச்சி மாவட்டம் 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்ட்டு பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. திரு.நந்தகிஷோர் I.A.S அவர்கள் பெரம்பலூர் மாவட்ட முதல் மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் 2001 ஆம் ஆண்டு மேலும் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் உருவானது. 2001 கணக்கெடுப்;பின் படி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் 11,89,170 சதுர அடி நிலப்பரப்;பினை உடையது. ஒரு சதுர கி.மீ.ல் 322 மக்கள் வாழ்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ளது. சென்னையிலிருந்து தெற்கே 267 கி.மீ. தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தின் சுற்றளவு 361 சதுர கி.மீ.
இது கடற்கரை இல்லாத மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்கே வெள்ளாறும் தெற்கே கொள்ளிடம் ஆறும் பாய்கிறது. பச்சை மலை இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய மலைப்பகுதியாகும்.
கனிமங்களும் தாதுக்களும்
இந்த மாவட்டத்தில் சுண்ணாம்புக் கற்கள், பாஸ்பேட் போன்ற தாதுக்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. கட்டடிங்கள் கட்டுவதற்குத் தேவையான கற்கள் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கிறது