பயணிகள்
நிழற்கூடம் (ம) பேருந்து நிலையம் இல்லாத வட்டம் :
பெரம்பலுார் மாவட்டத்தின் மிகப்பெரிய
வட்டமாக திகழ்வது வேப்பந்தட்டை வட்டம். 1997 –ம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகளா வேப்பந்தட்டை
வட்டமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் பொது மக்கள் பயன்பாட்டுக்கென்று
பயணிகள் நிழற்கூடம் (ம) பேருந்து நிலையம் இல்லாத வட்டமாக திகழ்கிறது. வே. வட்டாரத்தில்
29 கிராம ஊராட்சிகளும், 2 பேரூராட்சிகளும், 4 காவல் நிலையங்களும், 1 துணை காவல் கண்காணிப்பாளர்
அலுவலகமும் , 1 அரசு மேல்நிலைப்பள்ளியும், மாவட்ட தலைமை மருத்துவமனை, சார்பதிவாளர்
அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
வேப்பந்தட்டை
வட்டாசியர் (ம) ஒன்றிய அலுவலகத்திற்கு தினந்தோறும் 5000 ஆயிரத்திற்கும் அதிகமாக பொதுமக்கள்
வந்து செல்கின்றனர். நடப்பாண்டு 2016-17 ல் அரசு கலைக்கல்லுாரி (இருபாலர்) செயல்பட்டு
வருகிறது. வேப்பந்தட்டை வழியாக பெரம்பலுார் – ஆத்துார் - சேலம் நெடுஞ்சாலை செல்கிறது. நிழற்கூடம் அமைய போதுமான இட வசதிகள் இருந்தும்
25 ஆண்டுகளாக கட்டப்படவில்லை. இதனால் பயணிகளும் பொதுமக்களும் பெரிய அவதிக்குள்ளாகின்றனர்.
இப்பகுதி மக்கள் பேருந்து நிலையமும், காவல் நிலையமும் அமைக்க வேண்டுமென பலமுறை அரசிற்கும்,
அரசியல்வாதிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. 15 கி.மீ தொலைவில் அரும்பாவூா்
நிலையமும், 10 கி.மீ தொலைவில் பெரம்பலுார் காவல் நிலையமும் உள்ளது. புறக்காவல் நிலையம்
இருந்தும் சரியாக செயல்படவில்லை. மாவட்ட நிர்வாகம்
நடவடிக்கை எடுக்குமா?????